திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சித், நீட் தேர்வு மற்றும் அதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்து தனது காட்டமான கருத்துக்களைப் பதிவு செய்தார். நீட் தேர்வால் மாணவர்கள் சந்திக்கும் மனஉளைச்சல் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் குறித்தும், மாணவர்கள் எதிர்காலம் குறித்த தனது கவலையையும் வெளிப்படுத்தி, மத்திய அரசுக்கு எதிராகச் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.