இரண்டே இரண்டு விபத்துதான்… 15 பேர் பலி… தமிழகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த சோகம் !!

By Selvanayagam PFirst Published Jul 18, 2019, 7:55 AM IST
Highlights

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே நிகழ்ந்த இரு விபத்துகளில் 15 பேர் பலியாயினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். 

கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் என்ற இடத்தில் தனியார் பேருந்தும் காரும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த  இவ்விபத்தில், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற காரில் பயணித்த 7 பேரும், பஸ்சில் பயணித்த 2 பேரும் பலியாயினர். ஆம்னி பஸ் டிரைவர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் பலியாயினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதே போல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் கிராமத்திலிருந்து பயணிகள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்றது. வேன் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் கருங்குளம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஜெகதீஸ்வரன், அருணாசலம், முத்துலட்சுமி, பாக்யலட்சுமி, நித்தீஷ், அனீஸ்பாண்டி (குழந்தை). விபத்தில் பலியானவர்கள் திருத்தங்கல் இந்திராநகர் பாண்டியன் நகர் 6வது தெருவை சேர்ந்தவர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.  

click me!