தங்கையை பெண் பார்க்க சென்று, உடன் இருந்த அக்காவை பிக்கப் செய்து எஸ்கேப் ஆன சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை மைலாப்பூரில் உள்ள ஏகாம்பரம் தெருவை சேர்ந்தவர் முருகன் என்பவர்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ஸ்வேதா திருமணமாகி மூன்று வயதில் குழந்தை வைத்துள்ளார்.
இளைய மகள் பெயர் ராதிகா வயது 22. இவருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ராதிகாவை பெண் பார்க்க அண்ணாதுரை என்பவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, உடன் இடன் இருந்த அவரது அக்காவையும் பார்த்து உள்ளார்.
ராதிகாவை திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவதாக கூறி, அவர் அக்கா வுடன் தொடர் மொக்கை போட்டு வந்த அண்ணாதுரை, அக்காவை பிக்கப் செய்து உள்ளளர்.
அவர் இன்னொருத்தருடைய மனைவி, குழந்தை கூட உள்ளதே என்று கூட நினைத்து பார்க்காமல் அண்ணாதுரையும், தங்கையை திருமணம் செய்துக்கொள்ள உள்ள மாப்பிள்ளை என்ற பார்வையில் பார்க்காத அக்காவும் சேர்ந்து கள்ளக்காதல் செய்து எஸ்கேப் ஆன விஷயம் அனைவரையும் வேறு மாதிரி யோசிக்க வைத்துள்ளது
ஸ்வேதா வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகையும், 2 லட்ச ரூபாயையும் எடுத்துக கொண்டு, மைலாப்பூரில் உள்ள லஸ்கார்னர் பகுதியில் காத்திருந்து, அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.
இதனை அடுத்து தன் அக்கா வீட்டை விட்டு ஓடியதை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலிசார் தவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தால் ஸ்வேதாவின் பெற்றோர்கள் வெளியில் தலை காண்பிக்க முடியாமல் கூனி குறுகி உள்ளனர்