EPS : மருத்துவமனையில் போதை ஆசாமி அட்டகாசம்.. எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காத திமுக அரசு - விளாசும் இபிஎஸ்

Published : Apr 30, 2024, 02:43 PM ISTUpdated : Apr 30, 2024, 02:56 PM IST
EPS : மருத்துவமனையில் போதை ஆசாமி அட்டகாசம்.. எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காத திமுக அரசு - விளாசும் இபிஎஸ்

சுருக்கம்

மருத்துவமனையில் போதை நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி,  தமிழக அரசு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்தாதே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.

மருத்துவமனையில் தாக்குதல்

மருத்துவமனையில் போதை நபரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலையளிக்கின்றது.

 

குற்றச்செயல் அதிகரிப்பு

போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த விடியா திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும்.கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Drug Addiction: அரசு மருத்துவமனையில் வெறியாட்டம் ஆடிய வடிவேலு; போதை ஆசாமியால் தெறித்து ஓடிய செவிலியர்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 08 December 2025: 3500 ஆண்டுகள் பழமை.. காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்