அமைச்சர் மா.சுப்பிரமணியோடு மாரத்தானில் ஓடிய கல்லூரி மாணவன் திடீர் உயிரிழப்பு.! காரணம் என்ன.?

Published : Jul 23, 2023, 12:49 PM ISTUpdated : Jul 23, 2023, 12:53 PM IST
அமைச்சர் மா.சுப்பிரமணியோடு மாரத்தானில் ஓடிய கல்லூரி மாணவன் திடீர் உயிரிழப்பு.! காரணம் என்ன.?

சுருக்கம்

மதுரையில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் மயங்கி விழுந்த நிலையில், திடீரென ஹார்டி யாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.   

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதி கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களவை சேர்ந்த நான்காயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இளைஞர்கள் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியானது மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.  இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு பயிலக்கூடிய மாணவரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பின்பு மேடையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர் தினேஷின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உடற் கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது. மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப‌பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் அளித்த விளக்கத்தில் மாணவர் தினேஷ் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பின்பாக போட்டி முடிவடைந்து. அவரது நண்பர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து கழிவறைக்கு சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது  சக நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென ஹார்டி யாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். காலை 10.10 மணிக்கு திடீர் இதய அடைப்பு ஏற்பட்டு, 10.45 மணிக்கு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!