3 பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி... வேலூரில் பரபரப்பு!

Published : Sep 08, 2018, 10:56 AM ISTUpdated : Sep 09, 2018, 07:28 PM IST
3 பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி... வேலூரில் பரபரப்பு!

சுருக்கம்

வீட்டு பாடம் எழுதாதை கண்டித்து ஆசிரியை கண்டித்ததால், அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

வீட்டு பாடம் எழுதாதை கண்டித்து ஆசிரியை கண்டித்ததால், அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இச்சம்பவம் திருவண்ணாமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் வனத்துறை அரசுப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை ஏராளமான மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தமிழ் ஆசிரியையாக ராமாக்க என்பவர் பணியில் உள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் ராமாக்க, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். பின்னர், அந்த பாடத்துக்கான கேள்விகளை கொடுத்து, பதில் எழுதும்படி மாணவிகளுக்கு கூறியுள்ளார். அதில், மாணவிகள் சிந்து, ராஜகுமரி, காவ்யா ஆகியோர் சரிவர பதில் எழுதவில்லை என தெரிகிறது. இதனால், 3 பேரையும் ஆசிரியை ராமாக்கா கண்டித்துள்ளார். சக மாணவர்கள் மத்தியில், ஆசிரியை கண்டித்ததால், 3 பேரும் வேதனை அடைந்தனர்.

இதைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள அரளி மரத்தில் உள்ள விதையை அரைத்து 3 பேரும் சாப்பிட்டு மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அவர்களை உடனடியாக மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமயில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி ஜமுனா மரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!