தென்னந்தோப்பில் சொகுசு வாழ்க்கை; உறவினர்களின் எச்சரிக்கையால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

By Velmurugan sFirst Published Oct 30, 2023, 6:38 PM IST
Highlights

வாணியம்பாடி அருகே கள்ளக் காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை. பெண்ணின் உறவினர்கள் பெண்ணை சமாதானம் செய்து அழைத்து செல்ல முயன்ற போது கள்ளக் காதலனை தொடர்ந்து காதலி தற்கொலை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பற்றை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 40). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து வினோதினி(14) என்ற மகளும், ராமன், லக்ஷ்மன்(13) என்ற மகன்கள் என 3 பிள்ளைகள் உள்ளனர். கர்நாடகா மாநிலம் வைட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி பூஜா (26). திருமணம் முடிந்து ஜகதேவ்(6), கிரண்(4) என்ற 2 மகன்கள்  உள்ளனர்.

இந்நிலையில் சந்திரசேகர் வேலைக்கு சென்ற இடத்தில் பூஜா உடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூஜா வீட்டை விட்டு வெளியேறி சந்திரசேகர் உடன் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை கிராமத்திற்கு வந்துள்ளனர். தேங்காய் பட்டறை கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் தோப்பில் சந்திரசேகர் உறவினர் செல்வம் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

ஓசூரில் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்த அதிகாரிகள்

இந்நிலையில் பூஜா மற்றும் சந்திரசேகர் தேங்காய் தோப்பில் காவலாளி செல்வம் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வாழ்ந்து வந்துள்ளனர். மனைவி பூஜா காணாமல் போனதை தொடர்ந்து அவரது கணவர் தேவராஜ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகா மாநிலம் வைட் பீல்டு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பூஜா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை கிராமத்தில் தென்னந்தோப்பில் சந்திரசேகரன் உடன் வாழ்ந்து வருவதாக உறவினர் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிய வந்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து இன்று காலை பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேங்காய் பட்டறை கிராமத்திற்கு வருகை தந்து பூஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கி பூஜாவை காரில் அழைத்து செல்ல முயன்ற முயன்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சந்திரசேகர் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த பூஜா அதே தென்னந்தோப்பில் உள்ள மற்றோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

70 ஆண்டுகால காதல்; இறப்பிலும் இணை பிரியாத 90 வயது தம்பதி - திண்டுக்கல்லில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சுமார் 2 மணி நேரம் போராடி தற்கொலை செய்து கொண்ட பூஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோரை சடலமாக மீட்டனர். உடல்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கிராம போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!