வேலூரில் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விபத்து; இருவர் சம்பவ இடத்திலேயே பலி

Published : Aug 10, 2023, 03:08 PM IST
வேலூரில் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விபத்து; இருவர் சம்பவ இடத்திலேயே பலி

சுருக்கம்

குடியாத்தம் அருகே  சாலை விபத்தில் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் இருவர்  உயிரிழப்பு - குடியாத்தம் நகர போலீசார் விசாரணை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான கிருஷ்ணன் என்பவரின் மகன் துளசிதாஸ்  (வயது 16)  அதே பகுதி சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண் ஹரி பாலாஜி (16) ஆகிய இருவரும் குடியாத்தம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தனர். இதனிடையே நேற்று துளசிதாஸ் மற்றும் அருண் அரி பாலாஜி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் லிங்குன்றம் பகுதியில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

அப்பொழுது நெல்லுர் பேட்டை ஏரிக்கரை அருகே எதிரே வந்த மினி வேன்  மீது  மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் துளசிதாஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது உயிரிழந்தார். 

கன்னியாகுமரியில் இருசக்கர வாகனம் மோதி தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ; 4 பேர் காயம்

மேலும் இந்த விபத்தின் போது சாலையை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் அபிமன்யு என்பவர் மீதும் துளசிதாஸ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலை விபத்தில் உயிரிழந்த இருவரின்  உடல்களும் உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மாயம்; காவல்துறை விசாரணை

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!