எனக்கு 2 கிட்னியும் போயிடுச்சு.. உன்னை பிரிந்து இருக்க முடியாது.. காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்.!

By vinoth kumarFirst Published Sep 26, 2021, 12:41 PM IST
Highlights

எனக்கு 2 கிட்னியும் பாதிப்படைந்துவிட்டது. மனைவியை தீவிரமாக காதலிக்கிறேன் அவரை விட்டு பிரிந்து வாழ முடியாது. எனவே மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மயக்க நிலையில் இருந்த பொழுது பெட்ரோல் ஊற்றி எரித்தேன். குழந்தையுடன் நானும் தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார். 

திருப்பத்தூரில் கோயிலுக்கு போகலாம் என அழைத்துச் சென்று மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்த பெட்ரோல் ஊற்றி கணவர் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (28), டிரைவிங் ஸ்கூல் வைத்துள்ளார். இவரிடம் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு டிரைவிங் பயிற்சி பெற வந்த  திவ்யாவை (24) காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ (3) என்கிற மகள் உள்ளார். குழந்தை பிறந்ததும் சமாதானம் அடைந்த பெற்றோர் திவ்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை தாய் கவனித்ததால் அங்கேயே தங்கி திவ்யா பி.எட் படித்து முடித்துள்ளார். சத்தியமூர்த்தி அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் சத்தியமூர்த்தி கோயிலுக்கு போகலாம் என்று கூறி திவ்யாவையும் குழந்தையையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தனது டிரைவிங் ஸ்கூலுக்கு சென்றார். அங்கு திவ்யாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். அவர் எதற்காக மாத்திரை என்று கேட்டதற்கு  ‘‘கை, கால் வலிக்கிறது என்று சொன்னாயே அதற்காக வாங்கி வந்தேன்’’ என்று கூறியுள்ளார். இதை நம்பிய திவ்யா மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கினார். பின்னர், அவரை அருகிலுள்ள வயல்வெளிக்கு தூக்கிச் சென்று, உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். திவ்யா வலி தாங்க முடியாமல் அலறியதையடுத்து குழந்தையை தூக்கிக் கொண்டு கணவர் சத்தியமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் திவ்யாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனைவியை எரித்துவிட்டு, குழந்தையுடன் தப்பிய சத்தியமூர்த்தி உறவினர்களின் வாட்ஸ் அப்பிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எனக்கு 2 கிட்னியும் பாதிப்படைந்துவிட்டது. மனைவியை தீவிரமாக காதலிக்கிறேன் அவரை விட்டு பிரிந்து வாழ முடியாது. எனவே மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மயக்க நிலையில் இருந்த பொழுது பெட்ரோல் ஊற்றி எரித்தேன். குழந்தையுடன் நானும் தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார். தலைமறைவாக உள்ள சத்தியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். 

click me!