லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்.. ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 15 பேர் படுகாயம்.!

Published : Dec 31, 2023, 11:05 AM ISTUpdated : Dec 31, 2023, 11:08 AM IST
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்.. ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 15 பேர் படுகாயம்.!

சுருக்கம்

நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், ஒரு வயது குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், ஒரு வயது குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. அடேங்கப்பா இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா!

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!