பாறையில் விசைப்படகு மோதி கடலில் மூழ்கியது; மீனவர்கள் மீட்பு; ரூ. 25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கின!!

Published : Oct 26, 2022, 04:02 PM IST
பாறையில் விசைப்படகு மோதி கடலில் மூழ்கியது; மீனவர்கள் மீட்பு; ரூ. 25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கின!!

சுருக்கம்

நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் பாறையில் மோதிய விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனை அடுத்து படகில் இருந்த 11 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள், வலைகள் கடலில் மூழ்கின.

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கு சொந்தமாக ரூ. 80 லட்சம் மதிப்பிலான இழுவை வலை விசைப்படகு உள்ளது. இந்தப் படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த 1ஆம் தேதி தருவையைச் சேர்ந்த வினி என்ற மீனவர் தலைமையில் ஆழ் கடலுக்கு  சுமார் 11 மீனவர்களுடன்  சென்றுள்ளனர். நேற்று மீன் பிடித்து விட்டு சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடல் பகுதியில், கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் விசைப்படகு வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கடலில் இருந்த பாறையில் பயங்கரமாக மோதியது. இதில் விசைப்படகின் அடிப்பகுதி சேதமடைந்தது. என்ஜின் இருக்கும் பகுதியில் கடல் நீர் புகுந்தது. இதனால் விசைப்படகில் இருந்த மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.  

Watch : நெல்லையில் திருடனை துரத்தி சென்ற பொதுமக்கள்! - பரபரப்பு சிசிடிவி காட்சி!

இடிந்தகரை மீனவர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள், விசைப்படகில் இருந்த 11 மீனவர்களை மீட்டனர். அதற்குள் விசைப்படகு 95 சதவீதம் கடலுக்குள் மூழ்கியது. அதில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கின. இதே போல் அவர்களுக்கு சொந்தமான ஏராளமான வலைகளும் கடலில் மூழ்கியது. தற்போது 95 சதவீதம் கடலில் மூழ்கியுள்ள விசைப்படகை மீட்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து இழுவை விசைப்படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மூழ்கிய விசைப்படகை மீட்க தேவையான நடவடிக்கைகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எதற்காக நெல்லையில் கூடுதலாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பு; மக்கள் கொந்தளிப்பு!!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்