நெல்லையில் ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் கருப்பு சேலை அணிந்து திடீர் தர்ணா; பரபரப்பான மாநகராட்சி!!

Published : Oct 20, 2022, 03:31 PM IST
நெல்லையில் ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் கருப்பு சேலை அணிந்து திடீர் தர்ணா; பரபரப்பான மாநகராட்சி!!

சுருக்கம்

எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்று நெல்லை மாநகராட்சி மேயரைக் கண்டித்து ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் கருப்பு சேலை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் திடீரென கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி மேயர் பிஎம்.சரவணன் அறிவித்தார். திமுக வழக்கறிஞர் ஒருவர் மறைவு காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். 

இந்த நிலையில் மாநகராட்சி 7வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் இந்திரா மணி கருப்பு சேலை அணிந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து அவர் அலுவலகத்தின் நுழைவு வாசலில் தரையில் அமர்ந்து கையில் பதாகை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

அந்த பதாகையில், பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் ஸ்டாலின் ஆட்சியில் கடந்த எட்டு மாதங்களாக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நெல்லை மாநகராட்சி நிறைவேற்றவில்லை இதனால் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.  இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவரை மேயரிடம் அழைத்து சென்றனர். பின்னர் தனது கோரிக்கையை மேயரிடம் கவுன்சிலர் இந்திராமணி தெரிவித்தார். தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இந்திராணி தெரிவித்தார். 

இது குறித்து இந்திராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, '' கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயரிடம் முறையிட்டு வருகிறோம். ஆனால், எந்தப் பணிகளும் எனது பகுதியில் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு நான் பதில் சொல்ல முடியவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்க விட்டால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்'' என்றார். ஆளுங்கட்சி கவுன்சிலரே மேயரை கண்டித்து போராட்டம் நடத்திய சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்