நெல்லையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் பலி

Published : Jul 06, 2023, 05:11 PM ISTUpdated : Jul 06, 2023, 05:12 PM IST
நெல்லையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் பலி

சுருக்கம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மினி லாரி இருசக்கர வாகனம் மீது மோதிய கோர விபத்தில் ஒரு குழந்தை, 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவரது மகனான இசக்கிராஜ்க்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக இசக்கிராஜ், அவரது தாயார் சரஸ்வதி, சகோதரி கார்த்திகா, சகோதரியின் மகன் சந்துரு (2) என 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பாபநாசம் நோக்கி சென்றுகொண்டு இருந்தனர்.

இவர்களது இருசக்கர வாகனம் கோட்டாராங்குளம் விலக்கு அருகில் சென்றுகொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் அசோக்குமார் என்பவர் டிப்பர் லாரியை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென லாரியின் அச்சு முறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த விபத்தில் இசக்கிராஜ் மற்றும் அவருடன் பயணித்த 2 வயது குழந்தை, 2 பெண்கள் என 4 பேரும் படுகாயமடைந்தனர். குழந்தை, 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இசக்கிராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கரன்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி; 2 பேர் படுகாயம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.