BREAKING பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா? திறந்த 3 நாட்களில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா..!

By vinoth kumarFirst Published Jan 21, 2021, 1:15 PM IST
Highlights

பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா ஊருடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான 10-ம் வகுப்பு மாணவர் விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் சக மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

click me!