கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள்.. திருமணமான 2-வது நாளில் கணவன் கண்ணெதிரே உயிரிழந்த புதுமணப்பெண்..!

By vinoth kumarFirst Published Sep 1, 2022, 7:32 AM IST
Highlights

திருச்செங்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் திருமணமான 2 நாளில் கணவர் கண்ணெதிரே புதுமணப்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்செங்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் திருமணமான 2 நாளில் கணவர் கண்ணெதிரே புதுமணப்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்(35) மற்றும் சுப்பிரமணி(50) ஆகிய இருவரும் வேலூரிலிருந்து திருச்செங்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அதேபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனன்(29) என்பவர் தனது மனைவி ஜீவிதா(21) உடன் திருச்செங்கோட்டிலிருந்து வேலூர் நோக்கி பொலிரோ காரில் பயணம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;- செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலி..!

அப்போது, இரண்டு வாகனங்களும் எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கால் துண்டாகி உடல் பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதேபோல், பொலிரோ காரில் வந்த புதுமணப்பெண் ஜூவிதா என்பவரும் உயிரிழந்தனர். இருவருக்கும் கடந்த திங்கள் கிழமைதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், திருமணம் ஆகி இரண்டு நாளில் கோயிலுக்கு செல்ல காரில் வந்து கொண்டிருந்தபோது நேர்ந்த விபத்தில் கணவர் கண்ணெதிரிலேயே மனைவி ஜூவிதா உயிரிழந்துள்ளார். 

இதையும் படிங்க;- ஒன்ஸ்மோர் கேட்டு பேராசிரியர் அடம்! நீங்க கொடுக்குற பணத்துக்கு ஒரு தடவைதான்!ஒரு நாள் முழுவதும் இல்லை கூறிய பெண்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு போலீசார் 3 பேர் உடல்களை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 நாளில் விபத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!