பறை இசையில் மயங்கி பெண்களோடு குத்தாட்டம் போட்ட அதிமுக வேட்பாளர்; திருவிழா ஊர்வலத்தில் சுவாரசியம்

By Velmurugan sFirst Published Mar 28, 2024, 7:54 PM IST
Highlights

நாமக்கல்லில் தேர்தல் பிரசாரத்தின் போது எதிரே வந்த திருவிழா ஊர்வல குழுவோடு அதிமுக வேட்பாளர் குத்தாட்டம் போட்ட வீடியோ அங்கு கூடியிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். இவர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்தி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கோவில் திருவிழாவிற்காக மேளதாளத்துடன் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. அவ்வழியாக அதிமுக வேட்பாளர் தமிழ்மணி வாக்கு சேகரிக்க வந்தபோது, தீர்த்த குடங்களுடன் சென்றவர்களை கண்டவுடன் உற்சாக மிகுதியால் அவர்களுடன் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தார். 

10 மாசமா ஜெயில்ல இருக்குற உங்க அமைச்சரையே காப்பாத்த முடியல; நீங்க இந்தியாவ காப்பாத்த போறீங்களா? முதல்வரை தெறிக்கவிடும் பாஜக தலைவர்

இதனை சில நிமிடம் கண்டு ரசித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்  பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதை கண்டவுடன் வேட்பாளர் தமிழ்மணியை சாந்தப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றார். வேட்பாளரின் குத்தாட்டத்தை கண்ட பொதுமக்கள் சிறிது நேரம் அதனை மகிழ்ச்சியோடு ரசித்தனர்.

click me!