இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; 7 தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு

Published : Feb 16, 2023, 10:12 AM IST
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; 7 தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு

சுருக்கம்

இலங்கை கடல் கொள்ளையர்களால் 7தமிழக மீனவர்கள் கத்தி, கட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான படகில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கொண்டிருந்த நேற்று முன்தினம் மீன்பிடிக்கசென்ற நம்பியார் நகரை சேர்ந்த சந்துரு, மகேஷ், ஆகாஷ், சிவபாலன், முருகவேல், சூர்யா ஆகிய 7 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்துள்ளனர். 

3 படகில் 10 பேர் கத்தி, கட்டையுடன் வந்து தாக்குதல் நடத்தியதில் படகு உரிமையாளர் முருகனுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்கை நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் நாகை மீனவர்களிடம் இருந்து திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கி உள்ளிட்ட கருவிகளை பறித்து கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர் கிராமங்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு