வைகை எக்ஸ்பிரஸ்க்கு வயசு 42 .. !! கேக் வெட்டி கொண்டாடிய மதுரை மக்கள் ...

Published : Aug 15, 2019, 05:19 PM ISTUpdated : Aug 15, 2019, 05:20 PM IST
வைகை எக்ஸ்பிரஸ்க்கு வயசு 42  .. !! கேக் வெட்டி கொண்டாடிய மதுரை மக்கள் ...

சுருக்கம்

மதுரை வைகை எக்ஸ்பிரஸ்க்கு இன்று 42 வது பிறந்தநாள் . அதனால் பொதுமக்கள் சார்பில் கேக் வெட்டி உற்சாகமாக  கொண்டாடப்பட்டது .  

மதுரை வைகை எக்ஸ்பிரஸ்க்கு இன்று 42 வது பிறந்தநாள் . அதனால் பொதுமக்கள் சார்பில் கேக் வெட்டி உற்சாகமாக  கொண்டாடப்பட்டது .

மதுரையில் இருந்து சென்னைக்கு முதல் பகல்நேர அதிவிரைவு ரயில் 1977 ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வைகை அதிவிரைவு வண்டி என்னும் பெயரில் தொடங்கப்பட்டது . அதில் இருந்து தொடர்ச்சியாக மக்களுக்கு இந்த ரயில் சேவை ஆற்றி வருகிறது . இன்றோடு அது தனது ஓட்டத்தை தொடங்கி 42  ஆண்டுகள் ஆகிறது .

அதன் காரணமாக  ரயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . பொதுமக்கள் ரயில் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர் . பின்னர் ரயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர் .

முதலில் 10 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை , தற்போது 24 பெட்டிகளுடன் தினமும் மதுரை முதல் சென்னை வரை சென்று வருகிறது .

PREV
click me!

Recommended Stories

மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?