வைகை எக்ஸ்பிரஸ்க்கு வயசு 42 .. !! கேக் வெட்டி கொண்டாடிய மதுரை மக்கள் ...

Published : Aug 15, 2019, 05:19 PM ISTUpdated : Aug 15, 2019, 05:20 PM IST
வைகை எக்ஸ்பிரஸ்க்கு வயசு 42  .. !! கேக் வெட்டி கொண்டாடிய மதுரை மக்கள் ...

சுருக்கம்

மதுரை வைகை எக்ஸ்பிரஸ்க்கு இன்று 42 வது பிறந்தநாள் . அதனால் பொதுமக்கள் சார்பில் கேக் வெட்டி உற்சாகமாக  கொண்டாடப்பட்டது .  

மதுரை வைகை எக்ஸ்பிரஸ்க்கு இன்று 42 வது பிறந்தநாள் . அதனால் பொதுமக்கள் சார்பில் கேக் வெட்டி உற்சாகமாக  கொண்டாடப்பட்டது .

மதுரையில் இருந்து சென்னைக்கு முதல் பகல்நேர அதிவிரைவு ரயில் 1977 ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வைகை அதிவிரைவு வண்டி என்னும் பெயரில் தொடங்கப்பட்டது . அதில் இருந்து தொடர்ச்சியாக மக்களுக்கு இந்த ரயில் சேவை ஆற்றி வருகிறது . இன்றோடு அது தனது ஓட்டத்தை தொடங்கி 42  ஆண்டுகள் ஆகிறது .

அதன் காரணமாக  ரயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . பொதுமக்கள் ரயில் முன்பாக நின்று கேக் வெட்டி கொண்டாடினர் . பின்னர் ரயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர் .

முதலில் 10 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை , தற்போது 24 பெட்டிகளுடன் தினமும் மதுரை முதல் சென்னை வரை சென்று வருகிறது .

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!