திமுக அரசுக்கு வாய் மட்டும் தான் உள்ளது; செயலில் ஒன்றும் இல்லை - செல்லூர் ராஜூ விமர்சனம்

Published : May 06, 2023, 04:56 PM IST
திமுக அரசுக்கு வாய் மட்டும் தான் உள்ளது; செயலில் ஒன்றும் இல்லை - செல்லூர் ராஜூ விமர்சனம்

சுருக்கம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த நிலையில் திமுக அரசுக்கு வாய் சவடால் மட்டும் தான் உள்ளது செயலில் ஒன்றும் இல்லை என்று முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் 10 லட்சம் பேர் பார்த்து அக மகிழும் சித்திரை திருவிழாவில் இந்தண்டு மிக மோசமாக விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். மனவருத்தத்தோடு இதனை சொல்கிறேன். அறியாமையில் இந்த அரசு உள்ளது. முழுக்க முழுக்க உயிரிழப்புக்கு அரசின் குறைபாடே காரணம்.

வரலாற்றில் இதுவரை துயர சம்பவங்கள் நடந்ததில்லை. வரலாற்றில் இப்போது மட்டுமே இவ்வாறு நடக்கிறது. 250 மீட்டர் பகுதியில் 3பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. செயின் பறிப்புக்கு வந்த நபர் கோவிந்தா கோவிந்தா என சொல்லி சென்றுவிட்டனர். அதிமுக ஆட்சியில் தண்ணீர் அதிகமாக வந்த போது உயிரிழப்பு இல்லை. இப்போது தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கல்குவாரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி; 10 மணி நேரம் போராடி உடல் மீட்பு

ஆட்சியும், நிர்வாகமும் குளறுபடியும், குழப்பமுமாகம் உள்ளது. திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளுக்கு விஐபி பாஸ் ரத்து செய்ய வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் அரசு கொடுக்க வேண்டும். ஆற்றுக்குள் இறங்குபவர்களை காவல்துறை கண்டித்து எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆற்றில் அழகர் மட்டும் தான் இறங்க வேண்டும். ஆனால் எல்லோரும் இறங்குகிறார்கள்.

எங்கள் ஆட்சியில் சாரம் கட்டி தனி வழியில் சென்றனர். இப்போது அழகருக்கு முன்பாகவே இவர்கள் இறங்கிவிடுவார்கள். ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட அரசு. திராவிட மாடல் ஒன்றும் இல்லை. ஆளுநர் கருத்தை ஆதரிக்கவில்லை. ஆளுநரை திமுகவினர் விமர்சனம் செய்யும் போது ஆளுநர் எப்படி சும்மா இருப்பார். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில்  வெளிப்படைத் தன்மையில்லை.

கொடுத்த அறிவிப்பை திரும்ப பெறுவது தான் திமுக அரசு - ஆளுநர் தமிழிசை விமர்சனம்

மீனாட்சி சுந்தரேசுவரர், அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் விஐபி தரிசனங்களை திருப்பதி போல் ரத்து செய்ய வேண்டும். நான் என் தாயுடன் சென்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், அழகர் தரிசனம் செய்து எனக்கு மொட்டை அடித்து இருக்கோம். அப்போது அவ்வளவு கூட்டம் இருக்கும். அப்போது கூட இது போன்ற சம்பவம் நிகழவில்லை.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிழ்கவை அரசு முறையாக கண்காணிக்காததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்தது. கடந்த ஆண்டு 2 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 5 பேர் உயிரிழப்பு. தடுப்பு அணையின் 250 மீட்டர் பகுதியிலேயே 3 பேர் இறந்து உள்ளனர். இந்த அரசு வாய் சவடாலான அரசாக இருக்கே தவிர செயலில் இல்லை. 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு நிகழ்ந்ததாக தகவல் வந்துள்ளது என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!