24 மணிநேரத்திற்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Published : Dec 21, 2019, 03:39 PM IST
24 மணிநேரத்திற்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சுருக்கம்

அடுத்த 24 மணிநேரத்திற்கு தென்மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து முக்கிய அணைகள் பல நிரம்பி வழிந்தது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சென்னையில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.

இடையில் ஓய்ந்திருந்த மழை அவ்வப்போது வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்வட்டங்களில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு தென்மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!