போலீஸ் ஸ்டேஷன் டிரசிங் ரூமில் முனகல் சத்தம்.. பெண் போலீசுடன் ஏட்டு உல்லாசமாக இருந்தாரா? வெளியான பகீர் தகவல்.!

By vinoth kumarFirst Published Jun 13, 2022, 12:43 PM IST
Highlights

இதுதொடர்பாக அந்த நபரிடம் விசாரித்த போது மேலே ஏதோ ஆவணத்தைத் தேட வேண்டும் எனக்கூறி என்னை இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் சென்றுள்ளனர் என்றார். அந்த போலீஸ்காரர், தனது சீருடையை மாற்றுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அங்கே இருவரும் உல்லாசமாக  இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மதுரை போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசுடன், போலீஸ் ஒருவர் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மதுரை மாநகரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஏட்டு வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் இதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று  எழுத்தர் பணியில் இருந்த அந்த பெண் போலீசும், முதுநிலை போலீஸ்காரர் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் அனைவரும் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டனர். 

அப்போது ஸ்டேஷனுக்கு வந்த வெளிநபரிடம், மேல் மாடியில் ஆவணங்களைத் தேட வேண்டும். கீழே ஸ்டேஷனை கவனித்துக் கொள்ளுங்கள் என பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை கீழே காவலுக்கு அமர வைத்து விட்டு, மாடிக்கு சென்று இருவரும் அறையை பூட்டிக் கொண்டு தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ஒரு போலீஸ்காரர் ஸ்டேஷனுக்கு திரும்பினார்.  

இதுதொடர்பாக அந்த நபரிடம் விசாரித்த போது மேலே ஏதோ ஆவணத்தைத் தேட வேண்டும் எனக்கூறி என்னை இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் சென்றுள்ளனர் என்றார். அந்த போலீஸ்காரர், தனது சீருடையை மாற்றுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அங்கே இருவரும் உல்லாசமாக  இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இருவரையும் வெளியில் அழைத்து அந்த போலீஸ்காரர் கண்டித்துள்ளார்.

காதல் ஜோடிகளின் திரைமறைவு ரகசியம் அம்பலத்துக்கு வந்ததும், 2 பேரும் மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- அரசு பள்ளியில் பூட்டிய அறையில் முனகல் சத்தம்... கணவரிடம் வசமாக சிக்கிய ஆசிரியை..!

click me!