ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி பள்ளி வகுப்பறையில் சில்மிஷம்.. மாணவியின் முனங்கல் சத்தத்தால் வசமாக சிக்கிய ஆசிரியர்..!

By vinoth kumarFirst Published Dec 9, 2019, 5:34 PM IST
Highlights

பள்ளி வகுப்பறையிலேயே மாணவியுடன் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாணவியின் முனங்கல் சத்தம் கேட்டதையடுத்து 
அப்பகுதி மக்கள் பள்ளி அருகே சென்றனர். அங்கு ஆசிரியரும், மாணவியுடம் இறுக்கி அனைத்தவாறு இருந்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் ஆசிரியரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.

சிறப்பு வகுப்பு என்று கூறி பள்ளி வகுப்பறையில் தனிமையில் பிளஸ்-2 மாணவியுடன் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வகுப்பறையில் முனங்கல் சத்தம் கேட்டதையடுத்து ஆசிரியரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல் நிலைப்பள்ளியில் விடுமுறை தினமான நேற்று பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. பின்னர், சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் மாணவ- மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் இருந்து வீடுகளுக்கு புறப்பட்டனர். ஆனால், பள்ளி மாணவியும் , ஆசிரியரும் தனியாக இருந்தனர். 

இதனையடுத்து, பள்ளி வகுப்பறையிலேயே மாணவியுடன் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாணவியின் முனங்கல் சத்தம் கேட்டதையடுத்து அப்பகுதி மக்கள் பள்ளி அருகே சென்றனர். அங்கு ஆசிரியரும், மாணவியுடம் இறுக்கி அனைத்தவாறு இருந்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் ஆசிரியரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து, உடனே கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்கள் பிடியில் இருந்த ஆசிரியரை விடுவித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!