மகளின் மரணத்தால் துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சியில் உறவினர்கள்

By Velmurugan sFirst Published May 16, 2023, 5:11 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், சோகத்தில் இருந்த தந்தை மகள் இறந்த அதே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பறையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஆன்டணி அமல்ராஜ் (வயது 40). தச்சு தொழிலாளியான இவர் நேற்று மாலை வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக இரணியல் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் காவல் துறையினர் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது சடலத்தை மீட்டு அவரது மனைவி சத்தியகலா விடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆன்டணி அமல்ராஜ் சத்தியகலா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டு மகள்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்ததாகவும் மனமுடைந்த 9-ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் ஸ்ரீலட்சுமி வீட்டின் அறையில் உள்ள மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மதுவிலக்கு விவகாரம்; அதிமுகவுடன் இணைந்து செயல்பட தயார் - திருமாவளவன் அறிவிப்பு

மகள் தற்கொலை செய்து கொண்ட நாள் முதல் மன வேதனையில் இருந்து வந்த ஆன்டணி அமல்ராஜ் குடி போதையில் தன்னிடம் தகராறில் ஈடுபடுவதோடு மகள் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என்று கூறி வந்துள்ளார். தொடர்ந்து கணவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் சத்தியகலா ஒரு வாரத்திற்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு மூத்த மகளுடன் குளச்சலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் இருந்த ஆன்டணி அமல்ராஜ் நான் எனது மகள் சென்ற இடத்திற்கே செல்கிறேன். எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எனது உடல் உறுப்புக்களை யாருக்காவது தேவைப்பட்டால் தானம் செய்யுங்கள் என உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்து தனக்கு வாட்ஸ் ஆப்ல் அனுப்பி வைத்ததாகவும், அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பினேன். அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்த போது ஆன்டணி அமல்ராஜ் வீட்டில் அறையில் உள்ள பேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்து மகாசபா மாநில இளைஞரணி தலைவரை கொல்ல சதி? காவலாளியை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

இதனையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய இரணியல் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி சத்தியகலா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ததோடு இருவரின் செல்போண்களையும் பறிமுதல் செய்து ஆன்டணி அமல்ராஜ் மனைவிக்கு அனுப்பிய வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதம் கழித்து அதே தேதியில் துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!