18 வயது பூர்த்தி அடைந்த ஒரே வாரத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி

Published : May 25, 2023, 05:06 PM ISTUpdated : May 25, 2023, 05:14 PM IST
18 வயது பூர்த்தி அடைந்த ஒரே வாரத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த ஒரே வாரத்தில் பள்ளி மாணவி தனது ஆங்கில ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர்  பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பள்ளியில் ஒரு மாணவி 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்.  இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த வாரம் 18 வயது நிறைவடைந்து 19-வது வயது பிறந்தது. அந்த பிறந்த நாளை தனது பள்ளிக்கூட தோழிகளுடன் கொண்டாடினார். 

பிறந்த நாள் கொண்டாடி ஒரு வாரம் கழித்து தனது தோழி ஒருவரை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இறுதியில் மாணவியின் தோழியிடம் விசாரித்த போது, மாணவி படித்த அதே பள்ளியில் 32 வயதுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் மாணவியின் வகுப்புக்கு ஆங்கிலப்பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியரும், மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.  

பழனி கோவிலில் தங்க சங்கிலியை உண்டியலில் போட்ட பக்தை; கோவில் நிர்வாகத்தின் செயலால் நெகிழ்ச்சி

மாணவிக்கு 18 வயது பூர்த்தியடையாததால், அவர்களது காதலை ரகசியமாக வளர்த்து வந்தனர். இந்த நிலையில் மாணவிக்கு 18 வயது முடிந்ததும் அவர் கடந்த 19-ம் தேதியன்று, ஆசிரியருடன் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.  இதனை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது மகளை ஆசிரியர் கடத்தி சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் துறையினர் தலைமறைவான ஆசிரியர் மற்றும் மாணவியை தேடி வந்தனர். 

இந்தநிலையில்  ஆசிரியருடன் மாணவி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் மாணவியின் பெற்றோரை காவல் துறையினர் வரவழைத்தனர். அப்போது மாணவி, ஆசிரியருடன் இருப்பதை பார்த்து கதறி அழுதனர். எங்களுடன் வந்திடும்மா, இன்னும் படிக்க வேண்டியது இருக்கிறது. இந்த வயதில் திருமணம் வேண்டாம்மா? என்று உருக்கமாக பேசி மகளின் மனதை மாற்ற முயன்றனர். 

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன இளம் விவசாயியின் உயிர்; நியாயம் கேட்டு உறவினர்கள் மறியல்

ஆனால் பெற்றோரின் எந்தவொரு பேச்சுக்கும் மாணவி செவி சாய்க்கவில்லை. தனது காதலனான ஆசிரியருடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார். இதனிடையே ஆசிரியரின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது காவல் துறையினர் முன்னிலையில், மாணவியின் பெற்றோரும், ஆசிரியரின் பெற்றோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆசிரியரின் பெற்றோர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தங்களது மகளை ஆசிரியருக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினர். 

இதுதொடர்பாக இருவீட்டாரும் காவல் துறையினரிடம் எழுத்துமூலமாக கடிதம் எழுதி கொடுத்தனர். திருமணம் நடக்கும் வரை மகள் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதற்கு மாணவியும், ஆசிரியரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதனையடுத்து மாணவி தனது பெற்றோருடன் சென்றார். 18 வயது முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் பள்ளி மாணவி, ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?