வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப் பிராணியான பூனை; நெகிழ்ச்சி சம்பவம்!!

Published : Nov 23, 2023, 02:10 PM IST
வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப் பிராணியான பூனை; நெகிழ்ச்சி சம்பவம்!!

சுருக்கம்

கோவையில் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த நாகப் பாம்பை விசுவாசமிக்க பூனை தடுத்தது நிறுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜர். இவரது வீட்டில் நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தது. படிக்கட்டில் ஏறிய பாம்பு வீட்டிற்குள் நுழைய முயற்சித்தது. அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பூனை அந்தப் பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தது. பூனை சீறலை அறிந்தவுடன் வீட்டுக்குள் இருந்தவர்கள் கதவை மூடினர். 

இதையடுத்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் விரைந்து வந்து பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றார்.

Rain in Coimbatore: கோவை காணுவாய் - பன்னிமடை சாலையில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்!!

முன்னதாக பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று எதிர்கொள்ளும் புகைப்படம் வெளியாகி உள்ளது. செல்லப்பிராணியான பூனை, வீட்டுக்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியது நெகிழ்ச்சிக்குரிய விசயமாக அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர். பாம்புவும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 

கோவையில் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் ப்ளூ காய்ச்சல்; முக கவசம் அணிய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?
கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!