3 வயது சிறுவனை தள்ளிவிட்டு தந்தையை மிதித்து கொன்ற காட்டு யானை

Published : Jun 21, 2023, 08:52 AM IST
3 வயது சிறுவனை தள்ளிவிட்டு தந்தையை மிதித்து கொன்ற காட்டு யானை

சுருக்கம்

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே 3 வயது சிறுவனை கீழே தள்ளிவிட்டு அருகில் இருந்த நபரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி  மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கல்பனா. இவர்களது 3 வயது மகன் அனீஷ். இந்நிலையில் குமார் தர்மபுரியில் இருந்து வடவள்ளி ஐ.ஓ.பி காலனியில் உள்ள கணபதி நகரில் இருக்கும் தனது மாமியாரின் வீட்டுக்கு வந்தார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இங்கு தங்கி உள்ளார். 

தனது மனைவி மற்றும் மகனுடன் வனப் பகுதியில் விறகு சேகரிக்க  சென்று உள்ளார். மாலை 5 மணி அளவில் அவரது மனைவி கல்பனா அவரது கணவர் குமாரை அழைத்து காட்டு யானை எதிரில் வருகிறது என்று சத்தம் போட்டார். இதை தொடர்ந்து மனைவி கல்பனா  கீழே உள்ள பள்ளத்தில் விழுந்தார். யானையை பார்த்த சிறுவன் அனீஸ் அவனது தந்தையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

போதை ஆசாமிகளிடம் தனியாக சிக்கிய பெண் எஸ்ஐ ஐ வறுத்தெடுத்த மது பிரியர்கள் வைரல் வீடியோ

ஆனால் காட்டு யானை குமார் அருகில் வந்து குழந்தை அனீசை  தள்ளிவிட்டு விட்டு குமாரை மிதித்து வீசியது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்தில் இறந்து போனார். இதை பார்த்த  அவரது மனைவி கல்பனா அதிர்ச்சி அடைந்தார். ஊருக்குள் வந்து காட்டு யானை தனது கணவரை தாக்கியதை அக்கம், பக்கத்தில் தெரிவித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார். 

பாஜகவின் பி டீம் நான் அல்ல; என்னுடைய மறு உருவம் தான் பாஜக - சீமான் விளாசல்

இதை அடுத்து அங்கு வந்த வனத் துறையினர் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் உயிரிழந்த குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது மனைவி கல்பனா மற்றும் மகன் அனீசை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். காட்டு யானை குழந்தையை விட்டு விட்டு தந்தையை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?
கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!