வனப்பகுதிக்குள் துள்ளி குதித்து ஓடிய புள்ளி மான்கள்; கோவை வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்ட மான்கள் விடுவிப்பு

Published : May 13, 2024, 07:21 PM IST
வனப்பகுதிக்குள் துள்ளி குதித்து ஓடிய புள்ளி மான்கள்; கோவை வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்ட மான்கள் விடுவிப்பு

சுருக்கம்

கோவை வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்கள் இன்று வனப்பகுதியில் சுதந்திரமாக விடப்பட்டது.

கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் அண்மையில் மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பராமரிக்கப்படும் அட்டவணை வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் அட்டவணை வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத் துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வ.உ.சி பூங்காவில்  பராமரிக்கப்படும் புள்ளி மான்களை மாற்றம் செய்திட அதன் கழிவுகள் ("faecal pellets") ஆய்வகத்திற்கு ("AIWC, Vandalur") அனுப்பப்பட்டு புள்ளி மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது. பின்பு கடந்த மார்ச் மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி  மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகள் அளிக்கப்பட்டு வந்தது.

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த கணவன் கொடூர கொலை - திருப்பத்தூரில் பரபரப்பு

இதைத் தொடர்ந்து இவைகளை வனப் பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் கூண்டு கட்டமைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று மொத்தம் 26 புள்ளி மான்கள் ( "Spotted deers Adult male 10 + Adult female 11 + Fawn male 2 + Fawn female 3= total 26") பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப் பகுதியில்   நல்ல முறையில் விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட புள்ளி மான்கள் தீவனம் உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து  வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?
உஷ் உஷ் சத்தம்..! கடும் குளிரால் ஹெல்மெட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு.. நடுங்கிப்போன இளைஞர்.. வெளியான ஷாக்கிங் வீடியோ!