கோவை அருகே மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்; பசியின் கொடுமையால் நிகழ்ந்த சோகம்?

By Velmurugan sFirst Published Apr 5, 2024, 12:19 PM IST
Highlights

கோவை அருகே மகன், மகளுடன் பெண் ரயில் முன் பாய்ந்த நிலையில், மூவரும் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை துரைப்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் தனது கணவர், மகன் யுவராஜ் (16), மகள் ஜனனி (15) ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரட்சுமியின் கணவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் வழக்கு கொடுக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருக்க முடியாமல் தவித்த வரலட்சுமி கேரளாவுக்கு வேலை தேடி செல்வதாக கூறி வீட்டி கடந்த சில தினங்கள் முன்பு இரயில் மூலம் வந்துள்ளார். 

பின்னர் வந்த வரலட்சுமி மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோர் இரயில் பயணத்தின் போது தங்கள் உடைமைகளை யாரோ திருடியதால் வேறு வழியின்றி கோவை போத்தனூர் பகுதியில் இறங்கியுள்ளனர். பின்னர் உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்த மூன்று பேரும் கையில்  பணம் இல்லாமல் மிகுந்த துயரத்தில் இருந்துள்ளனர். இதை தொடர்ந்து தண்டவாளத்தின் இரும்பு பாதை வழியாகவே கோவை இரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளனர்.

போலீசாக இருந்து திருடர்களை பிடித்ததை விட பாஜக தலைவராகி அதிக திருடர்களை அண்ணாமலை பிடித்துள்ளார்-G.ராமகிருஷ்ணன்

ஆனால் அவர்கள் நடக்கமுடியாமல் பசியால் வாடி நஞ்சுண்டாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உணவு கேட்டு அவர்கள் நேற்று காலை உணவு வழங்கி உள்ளனர். அதை தொடர்ந்து அங்கேயே நீண்ட நேரம் இருந்த இவர்கள் மூன்று பேரும் மாலை இரயில் தண்டவாளத்தின் ஓரமாக நின்று கொண்டு இருந்துள்ளனர். 

தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ஊழலையே சட்டபூர்வமாக செய்த கட்சி தான் பாஜக - கனிமொழி விமர்சனம்

அப்போது அங்கு வந்த பயணிகள் இரயில் முன்பு மூவரும் ஒன்றாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் இரும்புபாதை போலிசார் மூவரின் உடல்களையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்கள் மூன்று பேர் கணவர் காணமல் போனதால் இறந்தார்களா? இல்லை கடன் தொல்லையால் இறந்தார்களா ? இல்லை வேறு ஏதாவது காரணமா என கோயம்புத்தூர் இரும்பு பாதை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வரலட்சுமி, மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோரை காணவில்லை என சென்னை துரைப்பாகம் காவல் நிலையத்தில் வரலட்சுமியின் உறவினர் கடந்த 29ம் தேதி புகார் அளித்திருந்த நிலையில் காவல் துறையினர் இவர்கள் மூவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் மூவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!