இன்று முதல் இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 20, 2021, 04:30 PM IST
இன்று முதல் இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை...!

சுருக்கம்

தமிழகத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோரம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.0 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 22 தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

மேலும் மார்ச் மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்,  அதே நாட்களில் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு எதுவும் பதிவாகவில்லை எனக்குறிப்பிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!