பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்; ஓபிஎஸ்க்கு பின்னடைவு!

Published : Apr 09, 2023, 12:08 PM IST
பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்; ஓபிஎஸ்க்கு பின்னடைவு!

சுருக்கம்

அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயான் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.  

அதிமுக சார்பில் எம்பியாக இருந்தவர் மைத்ரேயன். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கிய போது முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவி அவருக்கு ஆதரவாக இருந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னையில் மாற்றுத் திறனாளி தொண்டருடன் செல்ஃபி எடுத்து பாராட்டிய பிரதமர் மோடி!

இந்த நிலையில், தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்து வந்த மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. டெல்லிக்கு சென்று பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் அவர் பாஜகாவில் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் அவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

முதுமலையில் யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி

கோவையில் வேகமாக பரவும் கொரோனா... அடுத்தடுத்து இருவர் பலியானதால் பரபரப்பு

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!