
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடந்த முதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியதோடு இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர். இந்தப் பிரிவில் போட்டியிட்ட ரமிதா, மெஹுலி கோஷ், ஆஷி சௌக்சே ஆகியோர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வெற்றி குறித்து பேசிய சௌக்சே கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பதக்கம் வெல்வதற்காக உறுதியாகவும், அதற்கு தயாராகவும் இருந்த நிலையில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால், சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
ஆனால் தனிப்பிரிவில் போட்டியிட்ட ரமிதா 2 ஆவது இடமும், மெஹூலி கோஷ் 5ஆவது இடமும் பிடிக்க ஆஷி சௌக்சே 29ஆவது இடம் பிடித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.