
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர், ஹேலப் மூன்றாவது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் 4-ஆம் நிலை வீரரான ரஃபேல் நடால் தனது 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் டொனால்ட் யங்குடன் மோதினார்.
இதில், 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் நடால் வென்றார்.
நடால் தனது மூன்றாவது சுற்றில் ரஷியாவின் கரேன் காச்சனோவை சந்திக்கிறார்.
மற்றொரு சுற்றில் செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக்கை எதிர்கொண்டார் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்.
இதில் 6-2, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார்.
ஜோகோவிச் தனது மூன்றாவது சுற்றில் லாத்வியாவின் எர்னெஸ்ட் கல்பிஸை சந்திக்கிறார்.
மகளிர் பிரிவு 2-வது சுற்றில் பிரேசிலின் ஹத்தாத் மாயியாவை எதிர்கொண்டார் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்.
இதில் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் ஹேலப்.
ஹேலப் தனது 3-வது சுற்றில் சீனாவின் பெங் சுவாயை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபிரான்செஸ்கா ஷியாவோனை வீழ்த்தினார்.
இதேபோல் ஸ்பெயினின் கார்பின் முகுருஸா தனது 2-ஆவது சுற்றில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் யானினா விக்மேயரை வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.