இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - சொன்னவர் யாரு? 

Asianet News Tamil  
Published : May 16, 2018, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - சொன்னவர் யாரு? 

சுருக்கம்

Who is the Indian team to participate in various matches overseas?

இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "வரும் 2019-ஆம் ஆண்டின் ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா கடினமான குழுவில் இடம் பெற்றுள்ளது. 

பஹ்ரைன், தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவை வலுவானவையாக திகழ்ந்தாலும், இந்தியா 2-வது சுற்றுக்கு முன்னேறுவது ஒன்றும் கடினமாதில்லை.

நாம் இடம் பெற்றுள்ள பிரிவுக்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதற்கு வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம். 

கொரியா, ஈராக், ஈரான், ஜப்பான் போன்ற பலமான அணிகள் பிரிவில் நாம் இடம் பெறாதது நன்மை தருவதாகும்.  இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். 

இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியும் சிறந்த ஒரு வாய்ப்பாகும்.  குறிப்பாக நியூஸிலாந்து, கென்யா போன்ற அணிகள் கலந்து கொள்கின்றன. 

ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக துபாயில் பல்வேறு போட்டிகளில் இந்தியா ஆட வேண்டும்" என்று அவர் கூறினார். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பை.. ஸ்ட்ராங் டீமை களம் இறக்கும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் ரிட்டன்..!
நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!