சீன வீரருடனான போட்டியை சமன் செய்தார் விஸ்வநாதன் ஆனந்த்... இது மூன்றாவது போட்டி...

 
Published : Jun 01, 2018, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
சீன வீரருடனான போட்டியை சமன் செய்தார் விஸ்வநாதன் ஆனந்த்... இது மூன்றாவது போட்டி...

சுருக்கம்

Vishwanathan Anand match draw with Chinese player

நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றிலும் சீன வீரருடன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.
 
நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதினர். 

ஆனந்த் - லிரென் இடையே நேற்று நடைபெற்ற இந்த ஆட்டம் 35-வது நகர்த்துதலில் சமன் ஆனது. 

இந்ததப் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களையும் ஆனந்த் சம்ப செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதர 3-வது சுற்றுகளில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் - ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் மோதிய ஆட்டத்தில் மட்டும் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியர் - அமெரிக்காவின் ஃபாபியானோ கருனா, அமெரிக்காவின் வீஸ்லி சோ - சகநாட்டவர் ஹிகாரு நகாமுரா, அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியாரோவ் - ரஷியாவின் செர்கேய் கர்ஜாகின் ஆகியோர் மோதிய ஆட்டங்களும் சமனில் முடிந்தன என்பது கூடுதல் தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சுப்மன் கில் ஆடியே ஆகணும்.. அடம்பிடித்த கம்பீர், அகர்கர்.. தேர்வுக்குழுவில் எதிர்த்த 'அந்த' 2 பேர் யார்?
ஆஷஸ் 2025: தொடர் வெற்றிக்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் கிண்டலுக்கு டிராவிஸ் ஹெட் பதிலடி