
இந்தியா வரும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆப்கானிஸ்தானுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகள் இந்தியா வருகின்றன. அதன்படி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை அளிக்கும் விதமாக இந்த முயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகள் குறித்த கலந்தாலோசனைக்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் சௌத்ரி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடருக்கான 2-வது மைதானமாக டேராடூன் மைதானத்தில் அனுமதி வழங்கியதற்காக பிசிசிஐக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தத் தொடருக்காக கிரேட்டர் நொய்டாவில் உள்ள மைதானத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.