உடல் எடையை குறைக்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல: முடி வெட்டுவது, ரத்தத்தையும் வெளியேற்றியும் பலனில்லை!

Published : Aug 07, 2024, 02:58 PM IST
உடல் எடையை குறைக்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல: முடி வெட்டுவது, ரத்தத்தையும் வெளியேற்றியும் பலனில்லை!

சுருக்கம்

மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் கூடுதலான தனது உடல் எடையை குறைப்பதற்கு முடி வெட்டுதல் முதல் ரத்தத்தை வெளியேற்றியும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் கூடுதல் உடல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமிருந்து போகத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது. எப்படியும் இறுதிப் போட்டியில் விளையாடி இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதலான தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி – நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!

அதையும் தாண்டி முடி வெட்டுதல் மற்றும் ரத்தத்தை வெளியேற்றுதல் என்று பல வழிகளில் எல்லாம் முயற்சி செய்து பார்த்துள்ளார்கள். உடல் எடையை குறைக்க வினேஷ் போகத், அவரது பயிற்சியாளர் மற்றும் ஆதரவு ஊழியர்கள் என்று அனைவரும் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பயிற்சி செய்த நிலையில் கடைசியில் 1.85 கிலோ மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. கடுமையான உடற்பயிற்சியின் காரணமாக அவருக்கு நீர்ச்சத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி பதிவு – தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..