
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 28-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸை வென்றனர் கோவை கிங்ஸ்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 28-வது ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக நிலேஷ் சுப்பிரமணியன் 56 பந்துகளில் 57 ஓட்டங்களும், கெளஷிக் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
கோவை தரப்பில் ஹரீஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய கோவை அணியில் முரளி விஜய் டக் அவுட்டானார். இருப்பினும், சூர்யபிரகாஷ் 21 பந்துகளில் 30 ஓட்டங்களும், சீதாராம் 41 பந்துகளில் 44 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றி எளிதாக அமைந்தது.
பின்னர் வந்த அக்ஷய் சீனிவாசன் 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை எடுக்க, கோவை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. கண்டது
திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றிப் பெற்றதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்தது கோவை கிங்ஸ்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.