தங்க பதக்கம், கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சுதர்சன் பட்நாயக்!

Published : Jul 13, 2024, 05:57 PM IST
தங்க பதக்கம், கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சுதர்சன் பட்நாயக்!

சுருக்கம்

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப்பில் பிரபல மணல் சிறப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்க பதக்கம் கைப்பற்றி கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் மணல் சிற்ப கலைஞர்களுக்கான சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் உள்பட 21 கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில், பூரி ஜெகநாதரது தேர் மற்றும் கவிஞர் பக்தர் பலராம் தாஸின் சிற்பத்தை வடித்ததற்காக முதல் பரிசாக தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

மேலும், கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்றுள்ளார். இது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறியிருப்பதாவது: சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் விழாவில் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருது வென்றதில் ரொம்பவே சந்தோஷம். இதன் மூலமாக எனது மணல் சிற்ப கலை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. ஜெகநாத் மற்றும் மணல் கலை நிறுவனர் பலராம் தாஸ் ஆகியோரது மணல் சிற்பத்தை வெளிநாட்டில் உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு இன்று நிறைவேறியது. மகாபிரபு ஜெகநாதரின் மணல் ரதத்தை உருவாக்கியிருக்கிறேன் என்று பெருமையோடு தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ்வை ஓரங்கட்டி டி20 கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
CSK SWOT Analysis: 6-வது முறையா கோப்பையை அடிக்குமா சிஎஸ்கே? முழு பலம், பலவீனம் இதோ!