
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான 14-வது மண்டல அளவிலான கபடி போட்டியில், சிறுகனூர் அங்காளம்மன் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான 14-வது மண்டல அளவிலான கபடி போட்டி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பொறியியல் கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.
“நாக் அவுட்” முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சிறுகனூர் அங்காளம்மன் கல்லூரி, எம்.ஏ.எம் கல்லூரி, பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி, ரோவர் கல்லூரி அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறின.
இதில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் இறுதியில், சிறுகனூர் அங்காளம்மன் கல்லூரி அணியும், பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிறுகனூர் அங்காளம்மன் கல்லூரி அணி வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது.
பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி அணி 2-ஆம் இடத்தையும், பெரம்பலூர் ரோவர் கல்லூரி அணி 3-ஆம் இடத்தையும் பிடித்தன.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதன்மையர் பிரேமலதா பரிசு கோப்பைகளை வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.