தடையை  உடை என்று கிளம்பிய சன்டிமால்;  இதை அடிப்படையாக வைத்துதான் வாதாட போறாராம்...

First Published Jun 22, 2018, 2:50 PM IST
Highlights
Sandimal appealed against his ban


இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு தனது விளையாட விதித்த தடையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார். புகார் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமும் விதித்தது சர்வதேச கிரிக்கெட் குழு (ஐ.சி.சி.). 

இந்த நிலையில் தடையை எதிர்த்து சன்டிமால் அப்பீல் செய்துள்ளார். ஒரு இனிப்பு பொருளை வாயில் போட்டு மென்று, பிறகு எச்சிலை வைத்து பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்றினார் என்பதுதான் சன்டிமால் மீதான குற்றச்சாட்டு. 

ஆனால், வீடியோ ஆதாரத்தில் அவர் எந்த மாதிரியான இனிப்பை வாயில் போட்டு சுவைத்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அது தனக்கு ஞாபகமில்லை என்று கூறி நழுவிவிட்டார். 

இந்த வி‌ஷயத்தை அடிப்படையாக வைத்து சன்டிமால் தரப்பில் வாதிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க ஐ.சி.சி. தனி ஆணையரை நியமிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

tags
click me!