செஸ் ஒலிம்பியாட்: சேலத்தை சேர்ந்த நந்திதா வெற்றி.. பட்டைய கிளப்பும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள்

Published : Jul 29, 2022, 08:33 PM IST
செஸ் ஒலிம்பியாட்: சேலத்தை சேர்ந்த நந்திதா வெற்றி.. பட்டைய கிளப்பும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள்

சுருக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சேலத்தை சேர்ந்த நந்திதா ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.  

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியா சார்பில் ஆடவர் ஏ, பி, சி மற்றும் மகளிர் ஏ, பி, சி என மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்டு ஆடின.

ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரஹ்மான் முகமதுவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், அமீரக வீரர் ஹோசானி ஓம்ரானை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

ஆடவர் சி பிரிவில் இந்திய வீரர்கள் கார்த்திகேயன் முரளி மற்றும் அபிஜித் குப்தா ஆகிய இருவரும் தெற்கு சூடான் வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றனர். 

ஆடவர் பிரிவில் இந்தியா ஏ அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்திய மகளிர் பி அணி வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்திய மகளிர் சி அணியில் இடம்பெற்று ஆடிய ஈஷா கர்வடே மற்றும் பிரத்யுஷா ஆகிய இருவரும் ஹாங்காங் வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றி பெற்றனர். சி அணியில் இடம்பெற்றிருந்த சேலத்தை சேர்ந்த நந்திதா ஹாங்காங்கின் டெங் ஜிங் கிறிஸ்டலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஒட்டுமொத்தமாக முதல் நாள் நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்
6 மாதமாக மதுபானத்தை தொடாத இந்திய வீரர்.. மீண்டும் அணிக்கு திரும்புவேன் என சபதம்!