
ஊக்கமருந்து குற்றச்சாட்டிற்கு ஆளான ரஷியாவுக்கு வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.
2014 சோச்சி ஒலிம்பிக் போட்டியின்போது ரஷிய வீரர் /வீராங்கனைகள் பலர் அரசு அமைப்புகளின் ஆதரவுடன் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணைக் குழு ஆகியவை மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள் குற்றாச்சாட்டை உறுதிப்படுத்தி உள்ளன.
அதனையடுத்து ரஷியாவுக்கு வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.
அத்துடன், சோச்சி ஒலிம்பிக்கின்போது ரஷிய விளையாட்டுத் துறை அமைச்சராகவும், தற்போது அந்நாட்டின் துணை பிரதமராகவும் இருக்கும் விடாலி முட்கோவுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ரஷிய வீரர் / வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பொது வீரர் / வீராங்கனைகளாக கலந்துகொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.