உலக பளுதூக்குதல்: இந்தியாவின் குருதீப் சிங் மூன்று புதிய தேசிய சாதனைகள் படைத்து அசத்தல்...

 
Published : Dec 07, 2017, 10:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
உலக பளுதூக்குதல்: இந்தியாவின் குருதீப் சிங் மூன்று புதிய தேசிய சாதனைகள் படைத்து அசத்தல்...

சுருக்கம்

World Weightlifting India Gurudev Singh has created three new national achievements

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் குருதீப் சிங் மூன்று புதிய தேசிய சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 105 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் இந்தியாவின் குருதீப் சிங் பங்கேற்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 172, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 216 என மொத்தமாக 388 கிலோ எடையைத் தூக்கி 13-வது இடம் பிடித்தார். எனினும், அவர் தூக்கிய எடையானது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் ஸ்னாட்ச் பிரிவில் குருதீப் 171 கிலோ தூக்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதைவிட ஒரு கிலோ அதிகமாக தூக்கி தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் சரப்ஜித் சிங் 215 கிலோ தூக்கியதே உச்சபட்சமாக இருந்தது. தற்போது குருதீப் 216 கிலோ தூக்கி அதை முறியடித்துள்ளார்.

அதேபோல் ஒட்டுமொத்தமாக சரப்ஜித் சிங் கடந்த 2010 காமன்வெல்த் போட்டியில் 384 கிலோ தூக்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது குருதீப் சிங் 388 கிலோ எடையை தூக்கி அந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதனிடையே, இந்தப் போட்டியில் சீனியர் பிரிவில் தேசிய அளவிலான 12 புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது  என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா