
புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 122-வது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 44-20 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டான் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 122-வது ஆட்டம் புனேவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் குஜராத் தரப்பில் ரைடர் சுகேஷ் ஹெக்டே 15 புள்ளிகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் குஜராத் அணி 14-வது வெற்றியைப் பெற தகுதி பெற்றது. இதன்மூலம் ‘ஏ’ பிரிவில் 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதேபிரிவில் புனேரி பால்டான் 63 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றனர்.
விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, தொடர் வெற்றிகளை குவித்தால் மட்டுமே அடுத்த அடுத்த ஆட்டங்களில் முன்னேற முடியும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.