பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா:பிரம்மாண்ட உடையில் சென்ற நீதா அம்பானி – முத்தம் கொடுத்து வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

Published : Jul 24, 2024, 03:47 PM IST
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா:பிரம்மாண்ட உடையில் சென்ற நீதா அம்பானி – முத்தம் கொடுத்து வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

சுருக்கம்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழா வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக இந்திய தொழிலதிபர் நீதா அம்பானி பிரம்மாண்டமாக சிவப்பு நிற உடையில் பாரிஸ் சென்றுள்ளார்.

இன்னும் 2 நாட்களில் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. பாரிஸில் செய்ன் நதிக்கரையில் தொடங்கும் தொடக்க விழாவில் விளையாட்டு வீரர்கள் கிட்டத்தட்ட 106 படகுகள் மூலமாக ஊர்வமாக அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தொழிலதிபரான நீதா அம்பானி பாரிஸ் சென்றுள்ளார்.

Paris Olympics 2024:பாரிஸ் ஒலிம்பிற்கு 10 லட்சம் ஆடைகளை ஏற்றுமதி செய்த திருப்பூர் Back Bay India ஆடை நிறுவனம்!

பிரான்ஸ் சென்ற நீதா அம்பானிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கையில் முத்தம் கொடுத்து வரவேற்றுள்ளார். ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவராக நீதா அம்பானியும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அற்புதமான தருணத்தில் நீதா அம்பானி இந்திய கைவினைத்திறன் மற்றும் பாரம்பரியத்தை அழகாக பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு நிற உடையில் அழகாக தோன்றினார். ஸ்லீவ்ஸ், டிரிம்ஸ், முதுகு மற்றும் உடற் பகுதியை அலங்கரிக்கும் தங்க நிற ஜர்தோசி வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற உடையில் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி – கம்பீர தோரணையோடு அரையிறுதிக்கு சென்ற இந்தியா மகளிர் அணி!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர். அதில், 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமை பயிற்சியாளருக்காக யுவராஜ் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குஜராத் டைட்டன்ஸ் – நெஹ்ரா விலகல்?

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!