
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டுள்ளார்.
முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாத பாண்டியா, விஜய் ஹஸாரே டிராபி போட்டியின் காலிறுதியில் பரோடா அணிக்காக விளையாடும் வகையில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியின்போதும் பாண்டியா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 16-ஆம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்குகிறது.
அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர், அஸ்வின், ஜடேஜா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.