டெல்லியில் நடக்கும் அரை மாரத்தான் வழித்தடத்தில் வாகனங்கள் இயக்க தடை…

Asianet News Tamil  
Published : Nov 07, 2017, 10:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
டெல்லியில் நடக்கும் அரை மாரத்தான் வழித்தடத்தில் வாகனங்கள் இயக்க தடை…

சுருக்கம்

Operating buses in the semi-marathon route in Delhi

டெல்லியில் வரும் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் அரை மாரத்தான் போட்டியின்போது, காற்று மாசு பிரச்சனையால் பங்கேற்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் காற்றுத் தரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு நடைபெற இருக்கும் அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அது தொடர்பாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் நேற்று கூறியது:

“அரை மாரத்தான் போட்டி நடைபெறும் நாளில், போட்டி வழித்தடம் முழுவதுமாக காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உப்பு கலக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தெளிக்கப்படும். அத்துடன், அந்த வழித்தடத்தில் வாகனங்கள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!
Abhishek Sharma: டெல்லிக்கு தண்ணி காட்டிய அபிஷேக் சர்மா.. 10 சிக்ஸர்களுடன் செஞ்சுரி..!