
தமிழ்நாடு சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டியில் சென்னையின் ரித்விக் சஞ்சீவி, பிரணவி, மதுரையின் அஸ்வின் கார்த்திக், திருவள்ளூரின் தீப்தா ஆகியோர் தங்களது பிரிவில் கோப்பை வென்று அசத்தினர்.
தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத்தின் ஒத்துழைப்புடன், ஹெ.ச்.ஏபி பாட்மிண்டன் மையம் சார்பில் தமிழ்நாடு சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டி நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கி இந்தப் போட்டி நடைபெற்று வந்தது.
இதில் 13 மற்றும் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு13 மற்றும் யு15) பிரிவுகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 646 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் 15 வயதிற்கு உள்பட்டோருக்கான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னையின் ரித்விக் சஞ்சீவி மற்றும் சென்னையின் சித்தாந்த் குப்தா மோதினர். இதில், 21-17, 16-21, 21-14 என்ற செட் கணக்கில் சித்தாந்த் குப்தாவை வென்றார் ரித்விக் சஞ்சீவி.
அதேபோன்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையின் பிரணவி மற்றும் கோவையின் தான்யா மோதினர். இதில், 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தான்யாவை வீழ்த்தினார் பிரணவி.
மற்றொரு ஆட்டமான யு-13 பிரிவு இறுதிச்சுற்றில் மதுரையைச் சேர்ந்த அஸ்வின் கார்த்திக் 21-15, 15-21, 21-7 என்ற செட் கணக்கில் கோவையின் நிதினை வென்று கோப்பை பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூரின் தீப்தா 21-18, 21-15 என்ற செட் கணக்கில் ஜெயானியை வென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.