
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இதுவரையில் விளையாடிய 4 நாட்களில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றது. துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது. இதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 5ஆவது நாளில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான குரூப் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 21-5 என்று கைப்பற்றிய சிந்து, 2ஆவது செட்டை 21-10 என்று கைப்பற்றி 16ஆவது சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக மகளிருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய ஜோடியான தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா தோல்வி அடைந்து குரூப் சுற்று போட்டியுடன் வெளியேறியது.
சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி – 3ஆவது முறையாக இலங்கையை ஒயிட்வாஷ் செய்து இந்தியா சாம்பியன்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.