தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம் கோவையில் ஜூலை நடைபெறுகிறது…

 
Published : Jun 03, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம் கோவையில் ஜூலை நடைபெறுகிறது…

சுருக்கம்

National motorcycle betting ceremony takes place in July

கோவையில், ஜே.கே. டயர் நிறுவனம், சுஸுகி மோட்டார்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் சுஸுகி ஜிக்ஸர் கோப்பைக்கான தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம் ஜூலையில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி, 12 வயது முதல் 16 வயது வரை, 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது.

சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜே.கே. டயர் நிறுவனம் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களுக்கான தேர்வு, தெற்கு மண்டலப் பகுதிக்கு பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.

அதேபோன்று கிழக்கு மண்டலப் பகுதிக்கு ஐசாலில் ஜூன் 10-ஆம் தேதியும், மேற்கு மண்டலப் பகுதிக்கு புணேவில் ஜூன் 18-ஆம் தேதியும் நடைபெறும்.

வடக்கு மண்டலப் பகுதிக்கு ஜூன் 25-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

இதனைத் தொடர்ந்து, வரும் ஜூலையில் கோவையில் தேசிய அளவிலான போட்டி நடைபெற உள்ளது.

இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஸ்பெயினில் நடைபெற உள்ள ரெட்புல் ரூக்கிஸ் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சுஸுகி ஜிக்ஸர் பைக்கும், அனைத்துப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும்.

தேசியப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜூன் 27-ஆம் தேதி வெளியிடப்படும்.

இவர்கள் கோவையில் நடைபெறும் பயிற்சி முகாமில் சேர்க்கப்படுவார்கள்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!